மடு ஆலய திருவிழாவில் பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி

மடு ஆலய திருவிழாவில் பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி

  • local
  • August 15, 2023
  • No Comment
  • 58

பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் இவ்வருடம் மடு திருத்தல ஆவணி திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த விழாவில் ஏழு இலட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அண்மையில் தெரிவித்திருந்தார்.

திருவிழா திருப்பலி
மடு திருத்தல ஆவணி திருவிழா இம்மாதம் ஆகஸ்ட் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்றையதினம்(15.08.2023) 6.15 மணிக்கு பரிசுத்த பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் மேதகு பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் மரியன்னையின் விண்ணேற்பு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply