
சமுர்த்தி உத்தியோகத்தரின் அநாகரிக செயல் -சுற்றிவளைத்து பிடித்தது காவல்துறை
- local
- August 8, 2023
- No Comment
- 18
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
குடும்பபெண் ஒருவருக்கு தையல் மெசின் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது காவல்துறை பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது ஆணுறுப்பினை புகைப்படம் எடுத்து வட்ஸ் அப் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணின் கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக அனுப்பி பாலியல் சேட்டை செய்து வந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான முறைப்பாடு ஒன்று காவல்துறையினருக்கு இன்று(7) கிடைக்கப்பெற்றிருந்தது.
மேலும் சந்தேக நபரான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பல்வேறு திருமணங்கள் மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு கணவன் அற்ற பெண்கள் மற்றும் தனிமையில் உள்ள பெண்களை நாடி தனது இச்சைக்காக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபரை நாளை (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021