தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

  • world
  • August 25, 2023
  • No Comment
  • 38

வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷ்ய அரசு திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்னர் படை குற்றம்சாட்டியுள்ளது.

மாஸ்கோவில் இருந்து சென்ற தனியார் வர்த்தக விமானம், புறப்பட்டு 100 கிலோ மீட்டரில் வானில் இருந்து புகையுடன் கீழே விழுந்து நொறுங்கியது.3 விமானிகளுடன் பயணம் செய்த 7 பேரின் பட்டியலில் ப்ரிகோஷின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ப்ரிகோஷின் சென்ற விமானத்தை திட்டமிட்டே ரஷ்ய விமானப் படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

உயிருடன் இருப்பதுதான் நல்லது
இதற்கிடையே, வாக்னர் படையினர் வெளியிட்ட காணொலியில், “ப்ரிகோஷின் உயிரிழந்ததாக தகவல் பரவி வருகின்றது. அவ்வாறு அவர் உயிரிழந்தால், அதற்கு காரணம் புடின் அரசின் கொலை முயற்சிதான் என்று நேரடியாக நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.மேலும், ப்ரிகோஷின் மரணம் குறித்த தகவல் உறுதிசெய்யப்பட்டால், மாஸ்கோவை நோக்கி நீதிக்காக மீண்டும் அணிவகுப்போம் என்றும் அவர் உயிருடன் இருப்பது உங்களுக்குதான் நல்லது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சில ரஷ்யச் செய்தி நிறுவனங்களும் கூட ப்ரிகோஜின் விமானம் ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறுகிறார்கள்.

இருப்பினும், ரஷ்யா தரப்பில் இருந்து இதுவரை யாரும் இந்த விடயத்தை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

இளவரசர் வில்லியமும் கேத்தரினும் அபேயை விட்டு வெளியேறி, கிரேட் வெஸ்ட் டோரில் உள்ள இன்னசென்ட் பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர்களை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் மரணம், சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையால்…
அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார்.…
பாப்பரசரின் முதற்கட்ட  தெரிவு  தீர்மானம் இன்றி முடிவு .

பாப்பரசரின் முதற்கட்ட தெரிவு தீர்மானம் இன்றி முடிவு .

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு…

Leave a Reply