மலேசியாவில் தனியார் ஜெட் விமானம் விபத்து: பத்து பேர் உயிரிழப்பு

மலேசியாவில் தனியார் ஜெட் விமானம் விபத்து: பத்து பேர் உயிரிழப்பு

  • world
  • August 18, 2023
  • No Comment
  • 19

மலேசியாவின் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானம் தரையிறங்குவதற்கு 2 நிமிடங்களுக்கு முன் கட்டுப்பாட்டை இழந்து, எல்மினா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதி தீப்பிடித்துள்ளது.

இதில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர்களும், விமானத்தில் பயணித்த 8 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லங்காவி விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.08 மணிக்கு புறப்பட்ட அந்தத் தனியார் விமானம், சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தை நோக்கிச் சென்றபோது விமான நிலையத்தை நெருங்கும் வேளையில் விபத்தில் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply