அடுத்த வாரம் ஜெர்மனிக்கு செல்லும்  ஜனாதிபதி

அடுத்த வாரம் ஜெர்மனிக்கு செல்லும் ஜனாதிபதி

  • world
  • September 25, 2023
  • No Comment
  • 70

pic credits : dreamstime.com

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கியூபாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் அடுத்த வாரம் ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேர்லின் உலகளாவிய உரையாடலின் முதல் நாளில் தலைவர்களின் கலந்துரையாடலில் பங்கேற்று ரணில் விக்ரசிங்க உரையாற்றவுள்ளார்.

கியூபாவில் நடைபெற்ற G77 உச்சி மாநாடு மற்றும் ஐ.நா பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (24)நாடு திரும்பியிருந்தார்.

உத்தியோகபூர்வ விஜயம்

இந்த நிலையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் செல்லும் ரணில் விக்ரமசிங்க, ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ் மற்றும் ஏனைய அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை தீர்க்கும் ஜேர்மனியின் உயர்மட்ட உலகளாவிய முயற்சியாக ஆரம்ப பேர்லின் உலகளாவிய உரையாடல் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்

ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ்சை தவிர ஐரோப்பிய பேரவை தலைவர் சார்ள்ஸ் மைக்கேல் மற்றும் பெல்ஜிய பிரதமர் அலெக்ஸ்சாண்டர் டி குரூய் ஆகியோர் இந்த உரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

அதிபரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, அதிபரின் மூத்த ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் நிதியமைச்சரின் ஆலோசகர் தேஷால் டி மெல் ஆகியோர் பெர்லினில் இரண்டு நாள் தங்கியிருக்கும் போது ஜேர்மனின் சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதேவேளை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாளைய(25) அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணைக்கான நிதியை வழங்குவது தொடர்பான மீளாய்வுகளுக்காக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply