முத்தையா முரளிதரனின் 800 திரைப்படம் சிங்கள மொழியிலும் வெளியாகிறது !

முத்தையா முரளிதரனின் 800 திரைப்படம் சிங்கள மொழியிலும் வெளியாகிறது !

நாட்டின் சட்டமொன்று இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்காக திருத்தப்பட்டுள்ளமைக்காக முரளிதரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள், எனக்கு நிறைய உதவினார்கள் என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.

நேற்றைய தினம் (21) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு நன்றி பாராட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “முதலில் என் சகோதரர் அர்ஜுன ரணதுங்கவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும், ஆரம்ப காலத்திலிருந்து என்னை ஒரு தந்தை போல் அவர் கவனித்து கொண்டார்”

அவர் இல்லையென்றால் நான் இங்கு வந்து பேசும் நிலை இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு அணித்தலைவர் கூட அவ்வாறு செயற்படவில்லை, அதை செய்யவும் முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இந்த படத்தை சிங்களத்தில் காட்ட அனுமதித்த அமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நாட்டிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள் மற்றும் எனக்கு நிறைய உதவினார்கள், அவர்கள் இந்த திரைப்படத்தை சிங்கள மொழியில் பார்க்க வேண்டும் என்றும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.  

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply