காதலுக்கு தாய் எதிர்ப்பு – உயர்தர மாணவியின் விபரீத முடிவு

காதலுக்கு தாய் எதிர்ப்பு – உயர்தர மாணவியின் விபரீத முடிவு

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 36

மொனராகலை நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை (07) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கங்கோடாகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்தவராவார்.

இளைஞன் ஒருவருடன் காதல் உறவில்

இவர் இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், தாயின் எதிர்ப்பு காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது. மொனராகலை தலைமையக காவல்துறை பரிசோதகர் பி. எஸ். சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply