காதலுக்கு தாய் எதிர்ப்பு – உயர்தர மாணவியின் விபரீத முடிவு

காதலுக்கு தாய் எதிர்ப்பு – உயர்தர மாணவியின் விபரீத முடிவு

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 19

மொனராகலை நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை (07) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கங்கோடாகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்தவராவார்.

இளைஞன் ஒருவருடன் காதல் உறவில்

இவர் இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், தாயின் எதிர்ப்பு காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது. மொனராகலை தலைமையக காவல்துறை பரிசோதகர் பி. எஸ். சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply