இரண்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்று..!!

இரண்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்று..!!

  • local
  • October 6, 2023
  • No Comment
  • 19

சாவகச்சேரி கச்சாய் வீதி உப்புக்கேணி ஒழுங்கையில் உள்ள க.சந்திரகுமார் என்பவரின் வளர்ப்பு மாடு 02/10 திங்கட்கிழமை இரவு இரண்டு கன்றுகளை ஈன்றதுடன் அதில் ஒரு கன்று இரண்டு கால்களுடன் மாத்திரம் பிறந்துள்ளது.

இதன்போது முதலில் ஈன்ற கன்று ஆரோக்கியமாக இருப்பதுடன்-இரண்டாவதாக பிரசவித்த இரண்டு கால்களுடன் மாத்திரம் பிறந்த கன்று பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.

மேற்படி மாட்டுக் கன்று வெறுமனே இரண்டு கால்களுடன் மாத்திரம் பிறந்துள்ள நிலையில் அதற்கு தலை இருக்கவில்லை என்பதுடன் பிறந்து சிறிது நேரம் அதன் உடலில் உயிர்த் துடிப்பு இருந்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த அதிசய கன்றினை கிராம மக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்-அத்துடன் உரிமையாளரால் இது தொடர்பாக கால்நடை வைத்திய அதிகாரி பணிமனைக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply