குமார் சங்கக்காரவுக்கு கிடைத்துள்ள உயர் பதவி

குமார் சங்கக்காரவுக்கு கிடைத்துள்ள உயர் பதவி

  • Sports
  • October 3, 2023
  • No Comment
  • 58

மெரைல்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) உலக கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைமை அதிகாரியாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

2021 ஆம் ஆண்டு முதல் எம்சிசியின் தலைவராக இருந்த சங்கக்கார, உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் இங்கிலாந்து அணி தலைவரான மைக் கேட்டிங்கிற்குப் பதிலாக இப்போது பதவியேற்கவுள்ளார்.

உலக கிரிக்கெட் கூட்டமைப்பிற்கு தலைமை
மெரைல்போன் கிரிக்கெட் கழகம் கிரிக்கெட் போட்டிகளின் சட்டதிட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாக இங்கிலாந்தின் பழைமையான ஒன்றாக காணப்பட்டு வருகின்றது.

இந்த கிரிக்கெட் அமைப்பின் தலைவராக கடந்த காலங்களில் செயற்பட்டு வந்த குமார் சங்கக்கார தற்போது குறிப்பிட்ட அமைப்பின் உலக கிரிக்கெட் கூட்டமைப்பினை தலைமை தாங்கவுள்ளார்.

மெரைல்போன் கிரிக்கெட் கழகத்தின் கிரிக்கெட் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களாக இந்தியாவின் முன்னாள் தலைவர் சௌராவ் கங்குலி, ஹீத்தர் நைட், ஜஸ்டின் லேங்கர், இயன் மோர்கன் மற்றும் தென்னாபிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply