இம்ரான் கான் கைது; 3 ஆண்டுகள் சிறை, 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை! – பாகிஸ்தான் நீதிமன்றம்

இம்ரான் கான் கைது; 3 ஆண்டுகள் சிறை, 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை! – பாகிஸ்தான் நீதிமன்றம்

  • world
  • August 9, 2023
  • No Comment
  • 40

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான், கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்தபோது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் ஆட்சியை இழந்தார். அவரைத் தொடர்ந்து, ஷெபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்றார். அதன் பின்னர் ஆளுங்கட்சி, இம்ரான் மீது ஊழல், மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தது.

இந்த நிலையில் இஸ்லாமாத் நீதிமன்றத்தில் இன்று இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹுமாயூன் திலாவார் (Humayun Dilawar), இம்ரான் கானை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். அதுமட்டுமல்லாமல், ஐந்து ஆண்டுகளுக்கு இம்ரான் தேர்தலில் போட்டியிடவும் நீதிமன்றம் தடைவிதித்தது.

 

ஆனால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தன்னுடைய சட்ட வல்லுநர்குழு உடனடியாக மேல்முறையீடு செய்யும் என்றும் இம்ரான் கான் கோரியதாகக் கூறப்படுகிறது. அதோடு, தங்கள் தரப்பில் சாட்சியங்களை முன்வைக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. வாதங்களை முடிக்க நேரம் சரியாக ஒதுக்கப்படவில்லை என்றும், இம்ரான் கானின் சட்ட வல்லுநர்குழுவில் ஒருவர் கூறினார். எவ்வாறாக இருப்பினும், தண்டனை விதிக்கப்பட்டவுடனே இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டார்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply