இம்ரான் கான் கைது; 3 ஆண்டுகள் சிறை, 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை! – பாகிஸ்தான் நீதிமன்றம்

இம்ரான் கான் கைது; 3 ஆண்டுகள் சிறை, 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை! – பாகிஸ்தான் நீதிமன்றம்

  • world
  • August 9, 2023
  • No Comment
  • 20

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான், கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்தபோது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் ஆட்சியை இழந்தார். அவரைத் தொடர்ந்து, ஷெபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்றார். அதன் பின்னர் ஆளுங்கட்சி, இம்ரான் மீது ஊழல், மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தது.

இந்த நிலையில் இஸ்லாமாத் நீதிமன்றத்தில் இன்று இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹுமாயூன் திலாவார் (Humayun Dilawar), இம்ரான் கானை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். அதுமட்டுமல்லாமல், ஐந்து ஆண்டுகளுக்கு இம்ரான் தேர்தலில் போட்டியிடவும் நீதிமன்றம் தடைவிதித்தது.

 

ஆனால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தன்னுடைய சட்ட வல்லுநர்குழு உடனடியாக மேல்முறையீடு செய்யும் என்றும் இம்ரான் கான் கோரியதாகக் கூறப்படுகிறது. அதோடு, தங்கள் தரப்பில் சாட்சியங்களை முன்வைக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. வாதங்களை முடிக்க நேரம் சரியாக ஒதுக்கப்படவில்லை என்றும், இம்ரான் கானின் சட்ட வல்லுநர்குழுவில் ஒருவர் கூறினார். எவ்வாறாக இருப்பினும், தண்டனை விதிக்கப்பட்டவுடனே இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply