மக்களை ஏமாற்றியிருந்தால் எம்மை சிறையில் அடைக்க வேண்டும்! அனுரகுமார பகிரங்க சவால்

மக்களை ஏமாற்றியிருந்தால் எம்மை சிறையில் அடைக்க வேண்டும்! அனுரகுமார பகிரங்க சவால்

  • local
  • August 22, 2023
  • No Comment
  • 17

சிலர் கூறுவது போல் தாம் ஒரு சதவீதமேனும் மக்களை ஏமாற்றியிருந்தால், தம்மை சிறையில் அடைக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அனுரகுமார நினைவுப்படுத்தும் விடயம்
அத்துடன் ஜே.வி.பி கடல் கடந்த கணக்குகளை பராமரித்து வருவதாக சிலர் கூறுவதாகவும், அத்துடன் தம்மை குறைந்தபட்சம் ஒரு நாளாவது சிறையில் அடைக்க வேண்டும் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளதாகவும் அனுரகுமார நினைவுப்படுத்தியுள்ளார்.இந்த நிலையில் “தாமோ தமது கட்சியை சேர்ந்த எவருமோ ஒரு சதவீதமேனும் மக்களை ஏமாற்றியதில்லை, அப்படிச் செய்திருந்தால், இன்று அரசியல் செய்ய முடியாது. எதிர்காலத்தில் ஜே.வி.பிக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுக்கள், வாய்மொழி தாக்குதல்கள் மற்றும் சேறு பூசுவதை எதிர்பார்க்கலாம்” என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டின் அரசியல் பாதையை மாற்றும் ஜே.வி.பியின் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆபத்து குறித்து எச்சரிக்கை
அதேவேளை “நாட்டில் இதுவரை இரண்டு அரசியல் முகாம்களுக்குள் மட்டுமே அதிகாரப் பரிமாற்றம் நடந்தது. இப்போது இரண்டு பிரதான முகாம்களும் ஒரே பக்கம் இருப்பதால் அதிகாரம் கடத்தப்படவுள்ளது.ரணில் விக்ரமசிங்க மட்டுமல்ல நாமல் ராஜபக்ச, அமைச்சர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் போன்ற சகல அரசியல்வாதிகளின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது” என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply