உண்மையான கருங்காலி மாலையை கண்டுபிடிக்கும் முறை

உண்மையான கருங்காலி மாலையை கண்டுபிடிக்கும் முறை

கருங்காலி மாலை என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். மருத்துவ ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல வகையான நன்மைகளை தரும்.

கருங்காலி மாலைகளை பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை பலரும் பயன்படுத்தினாலும், இவற்றில் எது ஒரிஜினல், எது போலி என கண்டுபிடிக்கும் முறை பலருக்கும் தெரியாமல் உள்ளது. இதனால் பலரும் கடைகளில் கிடைக்கும் போலி மாலைகளை வாங்கி ஏமாந்து வருகின்றனர். இவற்றை அணிவதால் எந்த பலனும் கிடையாது. உண்மையான மாலை எது என்பதை கண்டுபிடிக்கும் முறைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

கருங்காலி மாலை :

மருத்துவ குணமும், தெய்வீக சக்தியும் நிறைந்த எத்தனையான மரங்களில் ஒன்று கருங்காலி மரம். கருமையான நிறத்தில் இருக்கக் கூடிய இந்த மரம் மிகவும் அபூர்வ வகையை சேர்ந்ததாகும். மின் காந்த ஆற்றல், நேர்மறை சக்திகளை அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டது கருங்காலி மரம். இதன் ஆற்றலானது சுற்றி உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பரவக் கூடியதாகும்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மரம் பலவிதமான நன்மைகளை தரக்கூடியதாகும். அதனால் தான் நம் முன்னோர்கள் உலக்கை, வீட்டின் கதவுகள், சுத்தி மற்றும் அரிவாள் கைபிடி, வீட்டின் நிலை வாசல், கதவு, மரப்பாச்சி பொம்மைகள் போன்றவற்றை செய்வதற்கு கருங்காலி மரத்தை அதிகம் பயன்படுத்தினர். கோவில் கும்பாபிஷேகத்தின் போது கலசம் வைப்பதற்கும் இந்த கருங்காலி மரங்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் கோவில் மட்டுமின்றி, கோவிலை சுற்றி உள்ள பகுதிகளிலும் இடி, மின்னல் தாக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

கருங்காலியின் மருத்துவ குணங்கள் :

கருங்காலி மரத்தில் இருந்து செய்யப்பட்ட மாலைகள், சுவாமி சிலைகள் உள்ளிட்டவற்றை வீட்டில் வைத்திருப்பதால் சகலவிதமான தோஷங்கள் நீங்கி, ஐஸ்வர்யம் பெருகும். ருத்ராட்சத்தை போன்று இதுவும் சிவ பெருமானின் அம்சமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் இது செவ்வாய் கிரகத்திற்குரிய மரமாக கருதப்படுகிறது. இதனால் கருங்காலி மாலையை அணிந்து கொள்வதால் செவ்வாய் பகவானின் அருள் நமக்கு கிடைக்கும். கருங்காலி மர நிழலில் அமர்ந்தாலும், அதனால் செய்யப்பட்ட மாலையை அணிந்து கொண்டாலும் பல விதமான நோய்கள் குணமாகும். ரத்தம் சுத்தமாவது, ஜீரண கோளாறு, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறு, மலட்டுத்தன்மை , உடல் சோர்வு ஆகியவற்றை தீர்க்கக் கூடியதாகம்.

கருங்காலி மாலையை யாரெல்லாம் அணியலாம் ?

கருங்காலி மாலையை ஆண், பெண் என யார் வேண்டுமானவாலும் பயன்படுத்தலாம். குறிப்பாக மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், செவ்வாய்கிழமை பிறந்தவர்களும், மார்ச் 20 முதல் ஏப்ரல் 20 வரையிலான தேதியில் பிறந்தவர்களும் அணிந்தால் நல்ல மருந்தாக பயன்படும். வீட்டில் சிறிய அளவாவது கருங்காலிக் கட்டையை வாங்கி வைப்பது தெய்வ சக்தியை பெருக செய்யும். கருங்காலிக் கட்டையை ஒரு வாளியில் உள்ள தண்ணீரில் இரவு போட்டு வைத்து விட்டு, காலையில் பார்த்தால் அந்த தண்ணீரில் நிறம் பழுப்பு நிறமாக மாறி இருக்கும். இந்த தண்ணீரைக் கொண்டு குளித்தால் எப்படிப்பட்ட சரும பிரச்சனையும் தீரும். தீய சக்திகள், தீய எண்ணம் கொண்டவர்களின் பார்வை ஆகியவை நெருங்காமல் காக்கும்.

உண்மையான கருங்காலி மாலையை கண்டுபிடிக்கும் முறை:

இப்படி பலவிதங்களில் பயன் தரும் இந்த கருங்காலிக் கட்டைகள் சமீப காலமாக திரை பிரபலங்கள் பலரும் அணிய துவங்கி விட்டதால், இது பிரபலமாகி வருகிறது. இதனால் கடைகள், ஆன்லைன் என பலவற்றிலும் கருங்காலி மாலைகள், பிரேஸ்லெட் உள்ளிட்ட கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வர துவங்கி விட்டன. ஆனால் இவற்றில் எது உண்மையானது, எது போலியானது என எப்படி கண்டுபிடிப்பது என பலருக்கும் தெரியவில்லை. இதனால் அதிக விலை கொடுத்து கருங்காலி மாலையை வாங்கி பலரும் ஏமாறுகிறார்கள்.

Related post

விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பலன்களும்!

விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பலன்களும்!

ஆவணி மாதம் வரும் ‘வளர்பிறை சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். ஆவணிச் சதுர்த்தி நாளான இன்று (18.09.2023) நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும்…
துளசி பூஜை செய்வதற்கான சில டிப்ஸ்..!

துளசி பூஜை செய்வதற்கான சில டிப்ஸ்..!

துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவபெருமானும், இடையில் விஷ்ணுவும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. துளசி என்றால் தன்னிகர் இல்லாத பெண். ஸ்ரீ மகாலஷ்மியின் அம்சமாக கருதப்படும் துளசி…
ஏன் இரவில் நகங்கள் வெட்டக் கூடாது? ஜோதிடம் மற்றும் மருத்துவம் சொல்வது என்ன?

ஏன் இரவில் நகங்கள் வெட்டக் கூடாது? ஜோதிடம் மற்றும் மருத்துவம் சொல்வது…

பொதுவாக பெரியவர்கள் இரவில் நகங்களை வெட்ட வேண்டாம் என்று சொல்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதற்கு பல ஜோதிட மற்றும் மருத்துவ காரணங்கள் உள்ளன. அப்படியானால், இரவில் நகங்களை ஏன்…

Leave a Reply