வாகன ஓட்டுனர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

வாகன ஓட்டுனர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

  • local
  • October 3, 2023
  • No Comment
  • 61

ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண மக்கள் தவிர்ந்த அனைத்து மாகாண மக்களும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாகன வருமான அனுமதிப்பத்திம்
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த புதிய முறையின் மூலம் மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை (eRL 2.0) வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது வாகன வருவாய் அனுமதிப்பத்திரத்தை இணையவழி சேவை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் எந்தவொரு மாகாணத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேல்மாகாண இன்னும் சேர்க்கப்படவில்லை, மற்ற 8 மாகாணங்களும் தயாராக உள்ளன. அனைத்து அரசு சேவைகளுக்கான கட்டணங்களும் இணையவழி மூலம் செலுத்தப்படும்.

இணையவழி சேவை
மாநகர சபைகள், மாவட்ட செயலகங்கள் உட்பட 9 அரசு நிறுவனங்களை தேர்வு செய்து, முன்னோடி திட்டத்தை தொடங்கி செயல்படுத்தியுள்ளோம்.

வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்தே அனைத்து சேவைகளையும் இணையவழி மூலம் செலுத்தும் முறையை நாங்கள் தயார் செய்துள்ளோம்.

அடுத்த ஆண்டு மார்ச் 30 ஆம் திகதிக்குள் 100% இணையவழி மூல கட்டண சேவைகளை வழங்குவோம் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply