ஈரான் பயங்கரவாத தாக்குதலில் நால்வர் பலி

ஈரான் பயங்கரவாத தாக்குதலில் நால்வர் பலி

  • world
  • August 14, 2023
  • No Comment
  • 24

ஈரானில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் நடவடிக்கையானது நேற்றையதினம்(13.08.2023) ஈரானின் ஷிராஸில் நகரில் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பதில் தாக்குதல்
மேலும், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஆனால் கடந்த அக்டோபரில் இஸ்லாமிய அரசு 15 பேரைக் கொன்ற சம்பவத்திற்கான பதில் தாக்குதலாக இந்த தாக்குதல் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஈரானின் நாடாளுமன்றம் மற்றும் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் கல்லறையை குறிவைத்து 2017 இல் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு உட்பட ஈரானில் முந்தைய தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply