
மட்டக்களப்பில் யானை தாக்கி கடற்றொழிலாளர் உயிரிழப்பு
- local
- August 14, 2023
- No Comment
- 14
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்திற்கு கடற்றொழிலுக்காக சென்றவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (13.08.2023) காலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய கடற்றொழிலாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று இரவு (12.08.2023) கடற்றொழிலில் ஈடுபட சென்றுள்ளார்.
இதனையடுத்து வீடுதிரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடி சென்றபோது குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021