
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு !
- local
- September 15, 2023
- No Comment
- 21
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்று நபரொருவர் காளை மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் இருபாலையைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நித்தியசிங்கம் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (14-09-2023) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காளை மாட்டுக்கு உணவு வைக்க சென்ற வேளை காளை மாடு முட்டி காயமுற்றவர் வீழ்ந்து கிடந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021