குச்சவெளி – பெரியமலையில் கற்கள் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

குச்சவெளி – பெரியமலையில் கற்கள் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 39

திருக்கோணமலை – குச்சவெளி பெரியமலையில் கற்களை உடைத்து அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (07.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெரியமலையானது தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டு, அங்கு கற்கள் அகற்றுவதற்கான பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அங்கு கற்கள் உடைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அரச அதிகாரிகள் பராமுகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு, குச்சவெளி பிரதேச செயலக வாயிலை மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் கோரிக்கை

சம்பவ இடத்திற்கு வருகை தந்த குச்சவெளி உதவி பிரதேச செயலாளர், மக்களின் கோரிக்கையைக் கேட்டறிந்துள்ளார்.

மேலும், இரண்டு வாரகால அவகாசம் தருமாறும் அந்த காலபகுதிக்குள் இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்க்கமான முடிவு பெற்றுத்தர முடியும் எனவும் உறுதியளித்திருந்த நிலையில், தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த மலையானது முன்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டிருந்தாகவும் பொது மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிக்னறது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply