நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்

நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 31

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், இன்று நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization) இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் சுமாா் 615 கோடியில் செலவில் உருவான சந்திரயான் 3 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14 ஆம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான் 3

புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த விண்கலம், கடந்த முதலாம் திக‌தி நிலவின் சுற்றுப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கி இருந்தது.

இந்த நிலையில் நிலவை நோக்கிய பயணத்தின் அடுத்தகட்டமாக இன்று (05.08.2023) சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.இன்று மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை சந்திரயான் 3 நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கை சந்திரயான் 3 விண்கலம் நிறைவு செய்துள்ளது. அத்துடன், ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரை சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Related post

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

இளவரசர் வில்லியமும் கேத்தரினும் அபேயை விட்டு வெளியேறி, கிரேட் வெஸ்ட் டோரில் உள்ள இன்னசென்ட் பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர்களை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் மரணம், சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையால்…
அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார்.…
பாப்பரசரின் முதற்கட்ட  தெரிவு  தீர்மானம் இன்றி முடிவு .

பாப்பரசரின் முதற்கட்ட தெரிவு தீர்மானம் இன்றி முடிவு .

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு…

Leave a Reply