46 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழக பொலிஸார் நடவடிக்கை

46 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழக பொலிஸார் நடவடிக்கை

  • local
  • August 25, 2023
  • No Comment
  • 23

இலங்கையின் 46 கடற்கொள்ளையர்கள் மீது தமிழகத்தின் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேதாரண்யம், ஆற்காட்டு துறை, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடந்த 21,22ஆம் திகதிகளில் கோடியக்கரைக்குத் தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வழக்குப் பதிவு செய்து விசாரணை
இந்த தாக்குதலில் காயமடைந்த ஆற்காடுதுறை, வெள்ளபள்ளம் கடற்கொள்ளையர்கள் 15 பேர் தமிழகத்திலுள்ள நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார், 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத இலங்கையின் 46 கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply