வெடிக்கும் போராட்டங்களால் மக்களிடத்தில் செல்வாக்கை இழக்கும் கனடா பிரதமர்

வெடிக்கும் போராட்டங்களால் மக்களிடத்தில் செல்வாக்கை இழக்கும் கனடா பிரதமர்

  • world
  • September 25, 2023
  • No Comment
  • 37

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ”இப்சோஸ்” கனடா மக்களிடையே நடத்திய கருத்து கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது.

குறைந்து வரும் ஆதரவு

இக்கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கனடாவில் தேர்தல் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு எதிராக போராட்டம்

மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக .இந்தியா – புதுடில்லியில் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

நேற்று (24.09.2023) .இந்திய – புதுடில்லி ஜந்தர் மந்தரில், ஐக்கிய ஹிந்து முன்னணி அமைப்பினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளதுடன் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமரின் செயற்பாட்டைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், கோரிக்கைகள் அடங்கிய மனுவை போராட்டக்காரர்கள் கனடா துாதரகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இராஜதந்திரப் போர்

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18இல், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இது பெரும் இராஜதந்திரப் போராக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

Related post

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…
கொலராடோவில் நடந்த துப்பாக்கிச் சூடு -, ‘பாலஸ்தீனத்தை விடுவிப்போம்’ என்று கூச்சலிட் ட  சந்தேகநபர்

கொலராடோவில் நடந்த துப்பாக்கிச் சூடு -, ‘பாலஸ்தீனத்தை விடுவிப்போம்’ என்று கூச்சலிட்…

கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில், “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” என்று கூச்சலிட்ட ஒருவர் மொலோடோவ் காக்டெய்ல்களை வீசியதில் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டென்வரில் இருந்து சுமார்…
ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பில் விரிசலா?

ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பில் விரிசலா?

‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே மனக்கசப்போ?’ என்கிற கேள்வி நேற்று முன்தினத்தில் இருந்து உலகில் வட்டமடித்து வருகிறது. ‘ஒரு ஸ்ட்ரைட் ஆண் மற்றொரு…

Leave a Reply