சுகாதாரத் துறைக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை

சுகாதாரத் துறைக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை

  • local
  • August 14, 2023
  • No Comment
  • 51

இலங்கையில் மாகாண நிர்வாகங்கள் ஒவ்வொரு வருடமும் சுகாதாரத் துறைக்கான வரவு செலவுத் திட்டத்தில் 50-60 வீதத்தை மட்டுமே பெற்றுக்கொள்வதாக தேசிய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இதனால், மாகாணங்களில் சிறந்த சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களை மாத்திரமே சார்ந்திருக்க வேண்டிய நிலையை இது ஏற்படுத்துகிறது.

சுகாதாரத் துறைக்கான 2,299 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட மக்களின் பரவலைக் கருத்தில் கொள்ளாமல் ஒன்பது மாகாணங்களுக்கு பகிரப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஆய்வு
கிராமப்புற மருத்துவமனை மேம்பாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு 2021 ஆம் ஆண்டில் 5000 மில்லியன் ரூபாய்களாகும். எனினும் அதற்காக 3,350 மில்லியன் ரூபாய் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கண்டறிந்துள்ளது.

சுகாதாரத்துறையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டிற்காக ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய வழிகாட்டுதல் குழுக் கூட்டங்களை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, எனினும் இந்தக் கூட்டம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெறவில்லை.தேசிய சுகாதார சபை என்பது, சுகாதாரப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு முக்கியமான தளமாகும்.

எனினும் 2004 ஆம் ஆண்டிலிருந்து மிக உயர்ந்த மட்டத்தில் கூட்டப்படவில்லை.

இந்தநிலையில் நிதிப் பற்றாக்குறையால் நுண்ணுயிர் எதிர்ப்புத் திட்டம் எதிர்பார்த்த அளவில் செயல்படுத்தப்படவில்லை என்று கணக்காய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply