Ashes: “ஸ்டோக்ஸ் மீண்டும் மெசேஜ் செய்தால் டெலிட் செய்து விடுவேன்”- மொயீன் அலி

Ashes: “ஸ்டோக்ஸ் மீண்டும் மெசேஜ் செய்தால் டெலிட் செய்து விடுவேன்”- மொயீன் அலி

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 36

நடந்து முடிந்த ஆஷஸ் தொடர்தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான மொயீன் அலி அறிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து மோதிய ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்திருக்கிறது.

ஆனால் நேற்று நடைபெற்ற ஆஷஸ் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிதான் வெற்றி பெற்றது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆஷஸ் தொடர்தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று  இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான மொயீன் அலி அறிவித்திருக்கிறார். 

 

மொயீன் அலி

கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால்  இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் வேண்டுகோள் விடுத்ததால் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய ஆஷஸ் தொடருக்காக மொயீன் அலி மீண்டும் அணிக்குத்  திரும்பி இங்கிலாந்திற்காக விளையாடினார்.  

இதுகுறித்து  பேசிய மொய்தீன் அலி, “ நல்ல ஒரு காம்பேக் ஆக இந்த ஆஷஸ்  தொடர் அமைந்தது. அதுமட்டுமின்றி எனக்கு மறக்கமுடியாத தொடராகவும் இருந்தது. ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன். விக்கெட்டை வீழ்த்துவேன் என்று நான் நினைக்கவில்லை.

பென் ஸ்டோக்ஸ் அணிக்காக விளையாட சொல்லி மெசேஜ் செய்த காரணத்தால்தான் ஓய்வு அறிவித்த பிறகும்கூட அணிக்காக வந்து விளையாடினேன்.  இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்” என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். 

Related post

IPL தொடரின் 61ஆவது போட்டி இடமாற்றம் .

IPL தொடரின் 61ஆவது போட்டி இடமாற்றம் .

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும்…
8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…

Leave a Reply