கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • world
  • August 15, 2023
  • No Comment
  • 73

கனடாவின் கல்கரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் இது தொடர்பில் மக்கள் கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பகல் நேரத்தில் முப்பது பாகை செல்சியஸ்சை விடவும் அதிகமான வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு இந்த வெப்பநிலை அதிகரிப்பு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புற ஊதா கதிர்களின் வீழ்ச்சி

எச்சரிக்கை விடுக்கப்படும் பிராந்தியங்களில் வாழ்வோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சுகாதார நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வெப்பநிலை காரணமாக நோய்வாய்ப்படக்கூடியவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரதேச மக்கள் திறந்தவெளியில் இருப்பதனை தவிர்த்து அதிக அளவு நீரை பருகுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுவர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனங்களில் தனித்து விட்டு நீண்ட நேரத்திற்கு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு புற ஊதா கதிர்களின் வீழ்ச்சி அளவும் அதிகமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply