மதுபானம் அருந்துவிட்டு பாடசாலைக்கு வந்த மாணவியால் குழப்ப நிலை

மதுபானம் அருந்துவிட்டு பாடசாலைக்கு வந்த மாணவியால் குழப்ப நிலை

  • local
  • August 18, 2023
  • No Comment
  • 15

கெக்கிராவ பிரதேசத்தில் பியர் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றிற்கு முன்பாக பிரதான வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கெக்கிராவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் குறித்த மாணவி மீது சந்தேகம் அடைந்து மாணவியை தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.

மருத்துவ பரிசோதனை

பின்னர், குறித்த மாணவி கெக்கிராவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சுமித் முனசிங்கவிடம் அழைத்து வந்து ஒப்படைத்த பின்னர், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவி எப்படி மது அருந்தினார் என்பது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, சிறுமியின் தாயின் இரண்டாவது கணவனின் தந்தை தனக்கு பியர் குடிக்க கற்றுக் கொடுத்ததாக சிறுமி கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ பொலிஸார், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின் நன்னடத்தை அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதிபரிடம் வாக்குமூலம்
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, குறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் கருணா கீர்த்திரத்ன தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போது, அதிபர் தொலைபேசியை துண்டித்துள்ளார்.

பின்னர் குறித்த உத்தியோகத்தர் கெக்கிராவ பிராந்திய கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்து, குறித்த அதிபர் சிறுமி தொடர்பான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கவில்லை எனவும் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவித்தார்.

சிறுமி பியர் குடித்து பாடசாலைக்கு வந்தது ஏன், அவரை பியர் குடிக்க வைத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கெக்கிராவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமித் முனசிங்கவின் பணிப்புரைக்கமைய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply