அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • local
  • August 25, 2023
  • No Comment
  • 16

அரச ஊழியர்களுக்கு மாதம் 20000 கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதாந்தம் 76000 ரூபாய் தேவைப்படுவதாக அரசாங்கப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 28000 ரூபாவாக உள்ளது. இதன் காரணமாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை மாதாந்தம் 20000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அடுத்த வாரம் அரசாங்கத்திடம் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

அடிப்படை சம்பளம்
அடிப்படை சம்பளம், ஆரம்ப சம்பள கொடுப்பனவுகளை சேர்த்தாலும் 30,000 ரூபாய் மாதாந்த சம்பளம் பெற முடியாது .தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக 15 லட்சம் பேரில் வாழ்வதற்கு போதிய மாத சம்பளம் இல்லாமல் 13 லட்சம் பேர் அரச சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம்
சில அரச உத்தியோகத்தர்கள் உணவிற்காக காய்கறிகள் மற்றும் சோறு மாத்திரமே வேலைக்கு கொண்டு செல்வதாகவும், இது மிகவும் பரிதாபகரமான நிலை.எனவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பளம் அதிகரிக்கும் வரை உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. ஆனால் 2016ஆம் ஆண்டிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply