விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர்கள்

விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர்கள்

  • local
  • August 18, 2023
  • No Comment
  • 14

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையின் கீழ் 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பிரவேசிக்கின்றது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நிதி ஒழுக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மோசடிக்கு எதிரான ஆயத்தம் ஆகிய விடயங்களைக் கருத்தில் கொண்டே, சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை இலங்கைக்கு வழங்கப்படும்.

இரண்டாவது தவணையின் கீழ் 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இந்த இரண்டாவது தவணையை பெறுவது இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான செய்தியை வழங்கும். அத்துடன், நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பிரவேசித்துள்ளது என குறிப்பிட்டார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply