அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தின் மீது கொடூர தாக்குதல்! சிசிடிவி கமராவில் பதிவான காட்சி

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தின் மீது கொடூர தாக்குதல்! சிசிடிவி கமராவில் பதிவான காட்சி

அவுஸ்திரேலியாவின் Keysborough பகுதியில் வசிக்கும் இலங்கை குடும்பமொன்று வசிக்கும் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கீஸ்பரோ பகுதியில் உள்ள இலங்கை குடும்பம் வாழும் வீட்டின் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளமை சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சந்தேகநபர் கைது

இதன்போது தாக்குதல்தாரிகள் கருப்பு உடை அணிந்து, கூர்மையான ஆயுதங்களுடன் வந்து அச்சுறுத்திய நிலையில் தாக்குதலை எதிர்கொண்ட இலங்கையர் உடனடியாக அவர்களுக்கு பதிலளித்துள்ளமையும் பதிவாகியுள்ளது.மேலும், தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்களின் முக்கிய நோக்கம் காரை கடத்தி செல்வதாக இருக்கலாம் என  சம்பவத்தை எதிர்கொண்ட இலங்கையர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார.

தற்போது, சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய குழுவைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply