தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா: வெளியேற்றப்படும் உக்ரைனியர்கள்

தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா: வெளியேற்றப்படும் உக்ரைனியர்கள்

  • world
  • August 11, 2023
  • No Comment
  • 71

உக்ரைனின் குபியன்ஸ்க் அருகே வடகிழக்கு போர்முனையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதலின் தீவிரம் காரணமாக உக்ரைன் அதிகாரிகள் பொதுமக்களை குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில் உக்ரைனின் குபியன்ஸ்க் மீதான தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு இராணுவ படைகளின் செய்தி தொடர்பாளர் செர்ஜி செரேவதி கூறுகையில்,

”ரஷ்ய தரப்புக்கள் தற்போது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதன் மூலம் குபியன்ஸ்க் நகரை அவர்கள் முழுமையாக கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.

தீவிர தாக்குதல்
கடந்த செப்டம்பரில் உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தின் குபியன்ஸ்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உக்ரைன் படைகள் கைப்பற்றி இருந்தன.

எனினும் தற்போது ரஷ்ய தரப்புக்கள் குபியன்ஸ்க் நகரை கைப்பற்றுவதற்கான தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா நகரத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் குறித்த தாக்குதல் தொடர்பான எந்த ஒரு உத்தியோகபூர்வ தகவலையும் உக்ரைன் தரப்பு வெளியிடவில்லை என குறித்த செய்தியில் மேலும் குறித்ப்பிடப்பட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply