25 வயது இளைஞனை பத்து மாதங்களாக காணவில்லை – பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை

25 வயது இளைஞனை பத்து மாதங்களாக காணவில்லை – பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 61

மினுவாங்கொடை, கலஹுகொட பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 25 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன இளைஞரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மினுவாங்கொடை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்பு இலக்கம்
குறித்த இளைஞனின் பெயர் காளிங்க ரமேஸ் சதுரங்க பெரேரா எனவும் இவரது உயரம் 5 அடி 5 அங்குலம் எனவும் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591612 அல்லது 031- 2295223 என்ற இலக்கத்தின் ஊடாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply