இம்ரான் கான் கைது; 3 ஆண்டுகள் சிறை, 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை! – பாகிஸ்தான் நீதிமன்றம்

இம்ரான் கான் கைது; 3 ஆண்டுகள் சிறை, 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை! – பாகிஸ்தான் நீதிமன்றம்

  • world
  • August 9, 2023
  • No Comment
  • 71

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான், கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்தபோது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் ஆட்சியை இழந்தார். அவரைத் தொடர்ந்து, ஷெபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்றார். அதன் பின்னர் ஆளுங்கட்சி, இம்ரான் மீது ஊழல், மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தது.

இந்த நிலையில் இஸ்லாமாத் நீதிமன்றத்தில் இன்று இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹுமாயூன் திலாவார் (Humayun Dilawar), இம்ரான் கானை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். அதுமட்டுமல்லாமல், ஐந்து ஆண்டுகளுக்கு இம்ரான் தேர்தலில் போட்டியிடவும் நீதிமன்றம் தடைவிதித்தது.

 

ஆனால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தன்னுடைய சட்ட வல்லுநர்குழு உடனடியாக மேல்முறையீடு செய்யும் என்றும் இம்ரான் கான் கோரியதாகக் கூறப்படுகிறது. அதோடு, தங்கள் தரப்பில் சாட்சியங்களை முன்வைக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. வாதங்களை முடிக்க நேரம் சரியாக ஒதுக்கப்படவில்லை என்றும், இம்ரான் கானின் சட்ட வல்லுநர்குழுவில் ஒருவர் கூறினார். எவ்வாறாக இருப்பினும், தண்டனை விதிக்கப்பட்டவுடனே இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply