மாணவர்களிடம் பணம் அற­வி­டப்­பட்டால் கடும் நட­வ­டிக்கை எடுக்கப்படும்: ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை

மாணவர்களிடம் பணம் அற­வி­டப்­பட்டால் கடும் நட­வ­டிக்கை எடுக்கப்படும்: ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 88

வட மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பாடசாலை செலவுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(07.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கில் உள்ள பிரபல பாடசாலைகள் சில பாடசாலை மின்சார கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஈடு செய்வதற்காக மாணவர்களிடம் பணம் அறவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் நிலையில் பாடசாலைகள் மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது.

தற்போது அரசாங்கம் பாடசாலைக்கு வழங்கும் குடிநீர் தண்ணீர் கான கோட்டாவை மட்டுப்படுத்தவுள்ள நிலையில் மாணவர்களுக்கான சுத்தமான குடிநீரை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில் பாடசாலைகள் மாணவர்களிடம் நிதியை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் பெற்றோர்கள் நிதி வழங்க வேண்டாம். மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசாங்கம் பாடசாலைகளுக்கான மின்சார கொடுப்பனவுகளையும் அதிகரித்தே ஆக வேண்டும்.

சம்பளமற்ற விடுமுறை
இதற்கமைய பாடசாலைகள் மாணவர்களிடம் பணம் கேட்டால் பெற்றோர்கள் வழங்க வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நிர்பந்திக்கப்பட்டால் எமக்கு தகவல் தாருங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இலங்கை அரசாங்கம் கல்வி சீர்திருத்தத்துக்காக ஐந்தாயிரம் மில்லியன் ரூபாய்களை ஒதுக்கிய நிலையில் குறித்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.வட மாகாணம் உட்பட இலங்கையில் மூவாயிரம் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் பலர் சம்பளமற்ற விடுமுறையை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

மேலும், நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியருக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவை கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply