Elementor #8111

MI New York: `டைகர் கா ஹூக்கும்..' 55 பந்துகளில் 137 ரன்கள்; சீறிய பூரன்; அமெரிக்காவிலும் வென்ற MI

MI நியூயார்க் அணி இந்தத் தொடரை வென்றிருந்தாலும் தொடக்கத்தில் அத்தனை சிறப்பாக ஆடியிருக்கவில்லை. லீக் சுற்றில் ஆடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே MI அணி வென்றிருந்தது. இதனால் புள்ளிப்பட்டியலிலுமே நான்காவது இடத்தைப் பிடித்துதான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் அணிக்கு எதிராக MI அணியில் டெவால்ட் ப்ரெவிஸ் நிலைத்து நன்றாக ஆடி அரைசதம் அடிக்க ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை எடுக்க MI அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்ததாக சேலஞ்சர் சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் MI அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் MI அணியின் கேப்டனான பொல்லார்ட் லீக் சுற்றின் போதே காயம் காரணமாக பென்ச்சுக்கு சென்றுவிட்டார். நாக் அவுட்டில் பொல்லார்ட் இல்லாமல்தான் MI அணி களமிறங்கியது.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையில் MI அணி சியாட்டல் அணியை எதிர்கொண்டது. MI அணி முதலில் பந்துவீசி சியாட்டலை 183 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தது. ரஷீத்கான் 3 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். MI க்கு டார்கெட் 184. இந்த டார்கெட்டை MI அணி 16 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்துவிட்டது. அதற்கு ஒரே காரணம் கேப்டன் நிக்கோலஸ் பூரன் மட்டும்தான்.55 பந்துகளில் 137 ரன்களை அடித்து ஒற்றை ஆளாக MI அணியை வெல்ல வைத்தார். ப்ரெட்டோரியஸின் ஓவரில் 28 ரன்கள். ஆண்ட்ரூ டையின் ஓவரில் 3 சிக்சர்கள். ஹர்மீத் சிங்கின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் என பூரன் செய்தது அத்தனையும் அதகள ரகம்தான்.பூரனின் அதிரடியால் சிரமமேயின்றி MLC யின் முதல் சீசனை மும்பை அணி அசத்தலாக வென்று சாம்பியனாகியிருக்கிறது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…

Leave a Reply