இஸ்ரேலுக்கு இரண்டாவது நாசகாரி கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா

இஸ்ரேலுக்கு இரண்டாவது நாசகாரி கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா

  • world
  • October 11, 2023
  • No Comment
  • 81

இஸ்ரேலுக்கு அருகில் இரண்டாவது கடற்படை விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாய்க்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கா நாசகாரி கப்பலை இஸ்ரேலுக்கு நெருக்கமாக நகர்த்துவதாக அறிவித்தது.

இஸ்ரேலுக்கான பாதுகாப்பு உதவி
பென்டகன் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் போர் விமானங்களையும் நகர்த்தவுள்ளது.இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்றும், அதன் பாதுகாப்பு உதவி ஞாயிற்றுக்கிழமை முதல் நகரத் தொடங்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஒஸ்ரின் கூறினார்.

துருக்கி அதிபர் கடும் விமர்சனம்
இதேவேளை துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் செவ்வாயன்று அமெரிக்கா ஒரு நாசகாரி கப்பலை இஸ்ரேலுக்கு நெருக்கமாக நகர்த்தியதற்காக கடுமையாக விமர்சித்தார்.

அது காஸாவில் “கடுமையான படுகொலைகளை” செய்யும் என்று கூறினார். “அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல் இஸ்ரேலுக்கு அருகில் என்ன செய்யும், ஏன் அவர்கள் வருகிறார்கள்? அதில் இருக்கும் படகுகளும் விமானங்களும் என்ன செய்யும்? காசாவை சுற்றி தாக்கி, அங்கு கடுமையான படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எர்டோகன் ஒரு கூட்டுப் பத்திரிகையில் கூறினார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply