மாத்தறையில் இரு வீட்டுப்பணி பெண்கள் கொலை

மாத்தறையில் இரு வீட்டுப்பணி பெண்கள் கொலை

  • local
  • October 9, 2023
  • No Comment
  • 68

மாத்தறையில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றிய இரு பெண்கள் கொல்லப்பட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவர்கள் மலம்படை மற்றும் வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம் முறைப்பாட்டின் பிரகாரம் சனிக்கிழமை காலை வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேறி மாலையில் வீடு திரும்பிய போது வீட்டுப் பணிப்பெண்கள் இருவரையும் காணவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுப் பணிப்பெண்கள் வீட்டில் இல்லாததால் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்தமை தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பெண்கள்
67 மற்றும் 70 வயதுடைய இரு பெண்களும், பணிப்பெண்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிவறை பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அறை அலமாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கம்,12 வளையல்கள், 02 நெக்லஸ்கள், ஒரு தங்க கரண்டி, 39 வெளிநாட்டு நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் மாத்தறை, துடாவ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் வசம் இருந்த திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply