வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்கள் செய்துள்ள சுவிஸ் நாடாளுமன்றம்

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்கள் செய்துள்ள சுவிஸ் நாடாளுமன்றம்

  • world
  • September 26, 2023
  • No Comment
  • 71

சுவிஸ் நாடாளுமன்றம், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக, இன்னொரு வகையில் கூறினால், வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்கள்
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி, சுவிஸ் நாடாளுமன்றத்தில் மேலவை உறுப்பினர்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக சட்ட மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்கள்.

அந்த சட்ட மாற்றங்களுக்கு ஆதரவாக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளார்கள்.
என்னென்ன மாற்றங்கள்
Swiss tenancy laws என்னும் சுவிஸ் வாடகை வீடுகள் தொடர்பிலான சட்டங்களில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

 

1. வாடகை வீடுகளில் குடியிருப்போர், அந்த வீடுகளையோ அல்லது அந்த வீடுகளிலுள்ள அறைகளையோ வேறு யாருக்காவது வாடகைக்கு விடுவதாக இருந்தால், அவர்கள் முன்கூட்டியே வீட்டு உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறவேண்டும். அதுவும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் யாரையும் வாடகைக்கு வைக்கக் கூடாது.

Expatica

2. வீட்டு உரிமையாளர்கள், தாங்கள் வாடகைக்கு விட்டுள்ள வீட்டுக்கு, தாங்களே குடிவர முடிவு செய்தால், தங்களுக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருப்போரை, இனி எளிதாக வீட்டைக் காலி செய்ய வைக்க முடியும்.

முதலில் , அப்படி வீட்டில் வாடகைக்கு இருப்போரை வீட்டைக் காலி செய்ய வைக்கவேண்டுமானால், வீட்டு உரிமையாளர் 3 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply