வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்கள் செய்துள்ள சுவிஸ் நாடாளுமன்றம்

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்கள் செய்துள்ள சுவிஸ் நாடாளுமன்றம்

  • world
  • September 26, 2023
  • No Comment
  • 27

சுவிஸ் நாடாளுமன்றம், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக, இன்னொரு வகையில் கூறினால், வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்கள்
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி, சுவிஸ் நாடாளுமன்றத்தில் மேலவை உறுப்பினர்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக சட்ட மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்கள்.

அந்த சட்ட மாற்றங்களுக்கு ஆதரவாக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளார்கள்.
என்னென்ன மாற்றங்கள்
Swiss tenancy laws என்னும் சுவிஸ் வாடகை வீடுகள் தொடர்பிலான சட்டங்களில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

 

1. வாடகை வீடுகளில் குடியிருப்போர், அந்த வீடுகளையோ அல்லது அந்த வீடுகளிலுள்ள அறைகளையோ வேறு யாருக்காவது வாடகைக்கு விடுவதாக இருந்தால், அவர்கள் முன்கூட்டியே வீட்டு உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறவேண்டும். அதுவும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் யாரையும் வாடகைக்கு வைக்கக் கூடாது.

Expatica

2. வீட்டு உரிமையாளர்கள், தாங்கள் வாடகைக்கு விட்டுள்ள வீட்டுக்கு, தாங்களே குடிவர முடிவு செய்தால், தங்களுக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருப்போரை, இனி எளிதாக வீட்டைக் காலி செய்ய வைக்க முடியும்.

முதலில் , அப்படி வீட்டில் வாடகைக்கு இருப்போரை வீட்டைக் காலி செய்ய வைக்கவேண்டுமானால், வீட்டு உரிமையாளர் 3 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

இளவரசர் வில்லியமும் கேத்தரினும் அபேயை விட்டு வெளியேறி, கிரேட் வெஸ்ட் டோரில் உள்ள இன்னசென்ட் பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர்களை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் மரணம், சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையால்…
அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார்.…
பாப்பரசரின் முதற்கட்ட  தெரிவு  தீர்மானம் இன்றி முடிவு .

பாப்பரசரின் முதற்கட்ட தெரிவு தீர்மானம் இன்றி முடிவு .

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு…

Leave a Reply