வெடிக்கும் போராட்டங்களால் மக்களிடத்தில் செல்வாக்கை இழக்கும் கனடா பிரதமர்

வெடிக்கும் போராட்டங்களால் மக்களிடத்தில் செல்வாக்கை இழக்கும் கனடா பிரதமர்

  • world
  • September 25, 2023
  • No Comment
  • 82

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ”இப்சோஸ்” கனடா மக்களிடையே நடத்திய கருத்து கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது.

குறைந்து வரும் ஆதரவு

இக்கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கனடாவில் தேர்தல் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு எதிராக போராட்டம்

மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக .இந்தியா – புதுடில்லியில் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

நேற்று (24.09.2023) .இந்திய – புதுடில்லி ஜந்தர் மந்தரில், ஐக்கிய ஹிந்து முன்னணி அமைப்பினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளதுடன் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமரின் செயற்பாட்டைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், கோரிக்கைகள் அடங்கிய மனுவை போராட்டக்காரர்கள் கனடா துாதரகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இராஜதந்திரப் போர்

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18இல், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இது பெரும் இராஜதந்திரப் போராக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply