கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வெளிநாட்டவர் செய்த செயல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் செய்த செயல்

  • local
  • September 25, 2023
  • No Comment
  • 75

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து நேற்று இரவு வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை எத்தியோப்பியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர் 26 வயதான கென்ய மோட்டார் வாகன வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

கட்டார் ஏர்வேஸ் விமானம்

எத்தியோப்பியாவின் அடிஸ்அபாபாவிலிருந்து கட்டார் நாட்டின் தோஹாவுக்கு வந்த அவர் அங்கிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானம் QR-654 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் கொண்டு வந்த கைப் பையில் “குக்கீஸ்” பிஸ்கட் அடங்கிய 03 டின்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோ கிராம் எடையுள்ள 180 கொக்கெய்ன் வில்லைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வழியாக செல்லவிருந்த போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள்

இந்த கென்யா நாட்டவர் முதல் தடவையாக இலங்கைக்கு வந்திருந்ததாகவும், இவர் தொடர்பில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு சர்வதேச புலனாய்வுப் பிரிவு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், கொக்கேய்ன் போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply