ஈரான் பயங்கரவாத தாக்குதலில் நால்வர் பலி

ஈரான் பயங்கரவாத தாக்குதலில் நால்வர் பலி

  • world
  • August 14, 2023
  • No Comment
  • 82

ஈரானில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் நடவடிக்கையானது நேற்றையதினம்(13.08.2023) ஈரானின் ஷிராஸில் நகரில் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பதில் தாக்குதல்
மேலும், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஆனால் கடந்த அக்டோபரில் இஸ்லாமிய அரசு 15 பேரைக் கொன்ற சம்பவத்திற்கான பதில் தாக்குதலாக இந்த தாக்குதல் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஈரானின் நாடாளுமன்றம் மற்றும் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் கல்லறையை குறிவைத்து 2017 இல் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு உட்பட ஈரானில் முந்தைய தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply