சுகாதாரத் துறைக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை

சுகாதாரத் துறைக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை

  • local
  • August 14, 2023
  • No Comment
  • 84

இலங்கையில் மாகாண நிர்வாகங்கள் ஒவ்வொரு வருடமும் சுகாதாரத் துறைக்கான வரவு செலவுத் திட்டத்தில் 50-60 வீதத்தை மட்டுமே பெற்றுக்கொள்வதாக தேசிய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இதனால், மாகாணங்களில் சிறந்த சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களை மாத்திரமே சார்ந்திருக்க வேண்டிய நிலையை இது ஏற்படுத்துகிறது.

சுகாதாரத் துறைக்கான 2,299 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட மக்களின் பரவலைக் கருத்தில் கொள்ளாமல் ஒன்பது மாகாணங்களுக்கு பகிரப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஆய்வு
கிராமப்புற மருத்துவமனை மேம்பாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு 2021 ஆம் ஆண்டில் 5000 மில்லியன் ரூபாய்களாகும். எனினும் அதற்காக 3,350 மில்லியன் ரூபாய் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கண்டறிந்துள்ளது.

சுகாதாரத்துறையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டிற்காக ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய வழிகாட்டுதல் குழுக் கூட்டங்களை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, எனினும் இந்தக் கூட்டம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெறவில்லை.தேசிய சுகாதார சபை என்பது, சுகாதாரப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு முக்கியமான தளமாகும்.

எனினும் 2004 ஆம் ஆண்டிலிருந்து மிக உயர்ந்த மட்டத்தில் கூட்டப்படவில்லை.

இந்தநிலையில் நிதிப் பற்றாக்குறையால் நுண்ணுயிர் எதிர்ப்புத் திட்டம் எதிர்பார்த்த அளவில் செயல்படுத்தப்படவில்லை என்று கணக்காய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply