தலிபான்களை சந்தித்த இலங்கை பிரதிநிதி: தொடரும் சர்ச்சை

தலிபான்களை சந்தித்த இலங்கை பிரதிநிதி: தொடரும் சர்ச்சை

  • local
  • August 14, 2023
  • No Comment
  • 52

தலிபான் நிர்வாக பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை தவிர்க்குமாறு, வெளிநாடுகளில் உள்ள அனைத்துத் தூதுவர்களுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தலிபான் பிரதிநிதிகளுடன் இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதர் வைஸ் அட்மிரல் கொலம்பகே, சந்திப்பு நடத்தியதும், புகைப்படம் எடுத்துக்கொண்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இலங்கை தாலிபான் நிர்வாகத்தை இன்னும் அங்கீகரிக்காமையே இதற்கான காரணம் என வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் அனுமதி
மேலும், ஐநா இதுவரை தலிபான் நிர்வாகத்தை ஆப்கானிஸ்தானின் சட்டப் பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை எனவும் சார்க் செயலகம் தற்போதைய தலிபான் நிர்வாகத்தை சார்க்கின் மீண்டும் தொடங்கும் கொள்கை மற்றும் தொழில்நுட்ப அளவிலான கூட்டங்களுக்கு அழைக்கவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது

எனினும் இந்த சந்திப்பு குறித்து ஜெயநாத் கொலம்பகே இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தவிர்க்க முடியாத சந்திப்புகளுக்கான தேவை ஏற்பட்டால், கட்டாயம் வெளிவிவகார அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply