கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம்
- world
- May 13, 2025
- No Comment
- 129
பயனர்களின் தரவுகளைக் கசியவிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் குறித்த அபராதத்தை விதித்துள்ளது.
2022ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இதன்படி கடந்த சில வாரமாக இதற்கான விசாரணை தீவிரமாக நடந்து வந்தது.
இந்தநிலையில் குறித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.