முதன்முறையாக இந்தியா செல்லும் பிரித்தானிய பிரதமர் ரிஷி: கூடவே உருவாகியுள்ள சர்ச்சை

முதன்முறையாக இந்தியா செல்லும் பிரித்தானிய பிரதமர் ரிஷி: கூடவே உருவாகியுள்ள சர்ச்சை

  • world
  • August 30, 2023
  • No Comment
  • 18

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், G20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா செல்கிறார். இந்த தகவல் வெளியானதுமே கூடவே சில சர்ச்சைகளும் உருவாகியுள்ளன.

சர்ச்சைக்குக் காரணம்…
பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது, 12ஆவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

இந்தியா சார்பில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரான பியுஷ் கோயல், பிரித்தானியா சார்பில் பிரித்தானிய வர்த்தகச் செயலரான கெமி பேடனாக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வருகிறார்கள்.இந்த சூழலில் ரிஷி இந்தியா செல்கிறார். அவரும் இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிகிறது.

அந்த விடயம் தொடர்பில்தான் தற்போது பிரித்தானிய அரசியல்வாதிகள் பிரச்சினை எழுப்பியுள்ளார்கள்.

என்ன பிரச்சினை?
பிரச்சினைக்குக் காரணம், ரிஷி, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பதுதான். அதாவது, சமீபத்தில் தன் மனைவி அக்‌ஷதா மூர்த்தி தொடர்பில் சர்ச்சை ஒன்றில் சிக்கினார் ரிஷி. ரிஷி பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ஒன்றின் மூலம், அவரது மனைவியான அக்‌ஷதா பங்குதாரராக உள்ள Koru Kids என்னும் அமைப்பு வாயிலாக அவருக்கு லாபம் கிடைக்கலாம் என்ற கருத்து உருவாகியது. அந்த அமைப்பில் ரிஷியின் மனைவி பங்குதாரராக உள்ள விடயத்தை அவர் மறைத்ததாக பிரித்தானிய அரசியல்வாதிகள் பிரச்சினை எழுப்பினார்கள்.

ஆக, இப்போது பிரித்தானியாவும் இந்தியாவும் செய்துகொள்ளும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாகவும் ரிஷியின் மாமனார் குடும்பத்துக்கு லாபம் கிடைக்குமா என்பதை அவர் உறுதிசெய்யவேண்டும் என பிரித்தானிய அரசியல்வாதிகள் குரல் எழுப்பத் துவங்கியுள்ளனர்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply