பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்
- Cinema
- May 15, 2025
- No Comment
- 57
கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து ஆர்த்தியைப் பற்றி எழுந்த பேச்சுகளுக்கு ஆர்த்தி அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
தற்போது நடிகர் ரவி மோகனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “நான் எனது குடும்பத்தினரிடம், நெருங்கிய நண்பர்களிடம் மற்றும் என்னை உண்மையாக நேசிக்கும் ரசிகர்களிடம், விவாகரத்து கோருவதற்கு முடிவு செய்ததை ஏற்கெனவே பகிர்ந்திருந்தேன்.
இப்போது, சமீபத்திய பொது தோற்றங்களின் அடிப்படையில், எனது குணத்தை மட்டுமல்ல, கேள்விக்குள்ளாக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளால் நான் பொது வெளியில் அவதூறு செய்யப்படுகிறேன். இந்த கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எப்போதும் செய்தது போல, கண்ணியத்துடன், உறுதியுடன் மற்றும் நீதியின் மீது நம்பிக்கையுடன் என் உண்மையில் நிற்பேன் எனக் குறிப்பிட்டிருக்கிறேன்.