
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை
- Cinema
- October 30, 2023
- No Comment
- 35
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார்.
இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல் படமே சிபி சக்ரவத்திக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சிபி சக்ரவத்தி படம் இயக்க போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அது நடக்கவில்லை.
இதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சிபி சக்ரவத்தி இணையப்போகிறார் என கூறப்பட்டது. அது உறுதியாக நடக்கும் என சிவகார்த்திகேயன் வாக்கு கொடுத்துள்ளாராம்.
ஆனால், தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்தபின் தான் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் நடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறாராம் சிவா.
இதனால் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதற்குமுன் வேறொரு நடிகரை வைத்து புதிய படத்தை எடுத்து முடித்துவிடலாம் என முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் சிபி சக்ரவத்தி.
அதன்படி, தெலுங்கு நடிகர் நாணி ஹீரோவாக நடிக்கும் படத்தை சிபி சக்ரவத்தி இயக்கவுள்ளாராம். இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021