பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

  • local
  • May 9, 2025
  • No Comment
  • 48

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் Online ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை இன்று(09) முதல் ஆரம்பமாகின்றது.

WWW.UGC.AC.LK எனும் இணையத்தள முகவரியின் ஊடாக இதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்பின்னர் பதிவு நடைமுறையின் போது தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக விருப்ப ஒழுங்கை மாற்றியமைப்பதற்காக மாத்திரம் இரண்டு வார அவகாசம் வழங்கப்படவுள்ளது.

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 43,300 மாணவர்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…