தையிட்டி போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் பல்கலை மாணவர்கள் குழாம் .
- local
- January 3, 2026
- No Comment
- 24
சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை(3) பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தையிட்டி போராட்த்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில்
யாழ்.பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக பெருமளவிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர் .
இந்தநிலையில் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலையுடன் வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை, காங்கேசன்துறை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்களை தையிட்டிக்கு செல்ல விடாது, பேருந்தில் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தையிட்டியில் இடம் பெற்ற சட்ட விரோத விகாரக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்பவர்களின் விவரங்களை பதிவு செய்து பொலிசார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற சிவகுரு ஆதின முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் பொலிசார் மறித்து பதிவுகளை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக பெரும் பரபரப்பு நிலவுகின்றது .