டித்வா புயலினால் பாதிக்கப்படடவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு ஆரம்பம்
- local
- January 9, 2026
- No Comment
- 15
2025 டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்தத் திட்டம் இன்று ஆரம்பமாகியது .
அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, இராஜாங்கனை, சிறிமாபுர,ஹந்துன்கம பகுதிகளிலும் குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, தொடம்கஸ்லந்த,நிகவரெட்டிய, விதிகுலிய சந்தி -பகுதிகளிலும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பமானதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களினால் 6500 வீடுகள் முற்றாகவும் 113,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் கீழ் முழுமையாக சேதமடைந்த வீடொன்றுக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
முதல் கட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வைத்திருக்கும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்தார்.