சுவிட்சர்லாந்தில் தீ விபத்து 40 ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு
- world
- January 1, 2026
- No Comment
- 25
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பனிச்சறுக்கு சுற்றுலாத் தளத்திற்கு அருகாமையில் பாரிய தீப்பரவல் இடம்பெற்றுள்ளது .
அந்நாட்டு அதிகாரிகள் இத்தீவிபத்து பற்றி தெரிவிக்கையில் சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பனிச்சறுக்கு சுற்றுலாத் தளத்திற்கு அருகாமையில் எற்பட்ட தீவிபத்தில் 40 பேர் உயிரிழந்திருந்ததுடன் 100 ற்கும் அதிகமானோர் பாரிய காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
உயிரிழந்தவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தற்பொழுது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வாலிஸ் மாகாண மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) நோயாளிகளால் நிரம்பியுள்ள நிலையில், தீக்காயங்களுக்கு விசேட சிகிச்சை அளிக்கும் பிற மருத்துவமனைகளுக்கு உலங்கு வானூர்திகள் மூலம் காயமடைந்தோர் கொண்டு செல்லப்படுகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் அவசர கால மீட்புப் பணிகள் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
எனினும், தீ விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.