இலங்கைக்கு வந்த ரஷ்ய தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!

இலங்கைக்கு வந்த ரஷ்ய தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 53

களுத்துறை பகுதியில் உள்ள வீதியொன்றில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ​மேலும் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியமை சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.இந்த விபத்து சம்பவம் கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்த ரஷ்ய தம்பதியருடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வஸ்கடுவவில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து ஹிக்கடுவை பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போது இவ்விபத்து சம்பவித்துள்ளது.

ரஷ்ய தம்பதியினர் பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்ட நிலையில் குறித்த சாரதியை கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply